இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியைத் தாண்டியதாகவும், மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும் என்றும், அதன் பிறகு மக்கள் தொகை குறையத் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாகக் கூறியுள்ள ஐநா, இந்தியாவின் இளைஞர்கள் மக்கள் தொகை தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.