கர்நாடகத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனான சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
2016ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பட்டியலின மக்களுக்கான கணக்கெடுப்பைப் போன்று சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என சித்தரமைய்யா தெரிவித்தார்.