அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், இலவச முதலீட்டுத் திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு ‘டிரம்ப் கணக்கு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமெரிக்காவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் கணக்கு துவங்கப்பட்டு ஆயிரம் டாலர் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.