ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீசுவது அதிகரித்துவருகிறது.
இதற்கு ஹூதைதா, ராஸ் ஈஸா, அல்-சலீஃப் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இணையதளம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை தாக்குதல் நடத்தியது.