ஓசி பஸ் எனக்கூறி பெண்களை ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் இழிவாக பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், பெண்கள் அனைவரும் அரசு பேருந்தில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள் என்றும், வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும் எனவும் இழிவாகப் பேசினார்.
ஏற்கெனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ் என இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.