பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப் பதிவு கடந்த மே மாதம் 7அம் தேதி முதல் ஜூன்-6 வரை நடைபெற்றது. கலந்தாய்விற்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.