திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 4 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 447 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 323 கிராம் தங்கம், 17 ஆயிரத்து 671 கிராம் வெள்ளி மற்றும் 2 ஆயிரத்து 748 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.