திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
வெள்ளூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை திமுக எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட கிராம மக்கள் வாக்கு கேட்டு வருகை தந்த நீங்கள் தற்போது தான் தங்கள் பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
தெருவிளக்கு, மின்சாரம், பேருந்து சேவை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தாங்கள் தவிப்பதகாவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அப்போது கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் திமுகவினர் ஆவேசமாக பதிலளித்த நிலையில் எம்.எல்.ஏ தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.