முதலமைச்சரின் நலத்திட்ட விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கும் விழா நடத்தப்படுகிறது எனவும் அதற்கு காலை 5 மணிக்கே வர வேண்டும் என பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற முதியோர்கள், கர்ப்பிணிகள் காலை 6 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்து தராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கைக்குழந்தையுடன் மக்களை காக்கவைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் செயல் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.