அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுதாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பசுமை வழித்தடத்தை ஏற்பாடு செய்யவும், முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசி முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.