அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்த துயரமான விமான விபத்தை அறிந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
என்றும், நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.