கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் புறவழிச்சாலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அனுமதி இன்றி மணல் ஏற்றி சென்ற லாரியை கண்ட அவர், சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்றார்.
பின்னர், நாமக்கல் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் லாரியை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து, அதிமுக நிர்வாகி சரவணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.