விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் நீங்கலாக மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், உயிர்பிழைத்த பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் எனவும், 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேரும், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.