அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்த நிலையில், மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டடத்தின் மீதும் மோதியது.
இதில் விடுதி கட்டடம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது விடுதி உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட மீட்புக் குழுவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.