அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை விஜய் ரூபானி பதவி வகித்தார். இவரது மகள் ராதிகா ரூபானி லண்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
தனது மகளை காண விஜய் ரூபானியின் மனைவி அஞ்சலி ரூபானி 6 மாதங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தார். அவரை அழைத்து வர விஜய் ரூபானி லண்டன் பயணித்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார்.