லண்டனில் குடியேறி புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ப்ரதிக் ஜோஷி என்பவர் லண்டனில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மருத்துவராக சேவையாற்றி வந்த இவரது மனைவி கோமி வியாஸ், தனது கணவருடன் லண்டனில் குடியேறுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ப்ரதிக் ஜோஷியும், கோமி வியாசும் தனது 3 குழந்தைகளுடன் லண்டன் புறப்பட்டனர். அப்போது நேரிட்ட விமான விபத்தில் அவர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். இதனால், அவரது உறவினர்களும், சொந்த ஊரான பன்ஸ்வாரா பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.