விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தை சீரமைத்து தருவதாகவும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரின் மருத்துவ செலவையும் ஏற்பதாகவும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.