கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் - சிறப்பு தொகுப்பு
Aug 2, 2025, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் – சிறப்பு தொகுப்பு

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது காணலாம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வியாழக் கிழமை 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், புறப்பட்ட 5 நிமிடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் இருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது கடும் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக ஓடுபாதையை தாண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி, 166 பயணிகளுடன் துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது சரியான இடத்தில் நிற்க முடியாமல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதேபோல, கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி 55 பேருடன் பீகார் மாநிலம் பாட்னாவில் தரையிறங்க முற்பட்ட அலையன்ஸ் ஏர் பிளையிட் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தரையில் இருந்த 5 பேர் உட்பட 60 பேர் பலியாகினர்.

கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில், சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் 763 விமானம் மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் 1907 விமானம் ஆகியவை தொடர்பு கோளாறு மற்றும் உயர அறிவுறுத்தல்களை மீறியதால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 349 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி, 118 பேருடன் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம், எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் நுழைந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தால் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் சிக்கி 55 பேர் இறந்த நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கடந்த 1990-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, 146 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தரையிறங்க முயன்ற இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானம், முன்கூட்டியே தரையிறங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, 135 பேருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், தரையிறங்க முற்பட்டபோது போதிய வெளிச்சமின்மையால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேபோல, கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 213 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப முற்பட்டு இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அரபிக்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.

Tags: AhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingplane crashes in indiaenglandgujarat
ShareTweetSendShare
Previous Post

Good bye india – விபத்திற்கு முன் வீடியோ வெளியிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இருவர்!

Next Post

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா – அசிம் முனீருக்கு அழைப்பு!

Related News

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies