குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 246 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீட்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.