திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள மருந்தகம் மற்றும் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பாப்பாங்குளம் பவர் ஹவுஸ் பகுதியில் ஹரி பிரகாஷ் என்பவர் மருந்தகம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 9ஆம் தேதி மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் கடையை பூட்டி சென்ற அவர், மீண்டும் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், கடையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதை அறிந்தார்.
இது தொடர்பாக ஹரி பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.