நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் கார்களின் பயணம் செய்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
நெல்லை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே இரண்டு சொகுசு கார்களில் பயணித்த மூன்று பேர், சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
3 பேரும் கார்களின் மேற்பகுதியில் அமர்ந்தும், காரின் பக்கவாட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டும் பயணம் செய்துள்ளனர்.
இதனை, பின்னால், காரில் வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். சாலை விதிகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.