அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து பயங்கரமானது என ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை, குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த பூமி சவுகான் என்பவர் தவறவிட்டார். சர்தார் வல்பாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் செக்-இன் கேட்டில் இருந்த நிர்வாகிகள் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், இதனால், தாம் வீட்டிற்கு திரும்பியதாகவும் கூறினார்.
அகமதாபாத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு தாமதாக சென்றதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், தாம் முற்றிலும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தாம் பாதுகாப்பாக இருப்பதற்காக தமது தாய் கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் பூமி சவுகான் கூறினார்.