திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாலை வசதி இல்லாத பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.