வங்கதேசத்தில் அமைந்துள்ள நோபல் பரிசு வென்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் சூறையாடப்பட்டது.
சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான கச்சாரிபரி அருங்காட்சியகம் உள்ளூர் வாசிகளால் சூறையாடப்பட்டது.
வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை முற்றி பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான அருங்காட்சியகத்தைத் தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.