கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.
நெல்லை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டிய களியக்காவிளை , குழித்துறை , மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.