தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடர் கலந்து பாலை விற்பனை செய்த புகாரில் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 300 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.