திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கனகராஜ் என்பவரை பங்க் பாபு, ராஜா, சரவணகுமார் ஆகியோர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளியான பங்க் பாபுவை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. மேலும், ராஜா, சரவணகுமார் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராஜா, சரவணகுமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.