சென்னை அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் பிரதான சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யாமல், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைப் பிடித்து போக்குவரத்து போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யாமல், இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.