குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விபத்தில் உருக்குலைந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி விடுதியின் மேற்கூரையில் சிக்கியிருந்த விமானத்தின் பாகத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது போன்ற விவரங்கள் கருப்பு பெட்டி மூலம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.