இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதற்கு பதிலடியாக ஆப்ரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 என்ற பெயரில், ஈரானும் தாக்குதலை மேற்கொண்டதை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியது.
அதன்படி, டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சக தலைமையக கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், இஸ்ரேல் தாக்குதலால் வான்வெளியை ஈரான் மூடியதால், சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.