லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த அர்ஜுன் தனது மனைவியின் அஸ்தியை கரைப்பதற்காக இந்தியா வந்ததும், பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.