சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி கொடுமுடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மேககரையான் தோட்டத்து பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியம்மாள். இவர்கள் கடந்த ஒன்றாம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 16-ம் தேதி வரை காவல் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.