மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அம்மா திடலில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு, 52 நிபந்தனைகளுடன் மதுரை மாநகர காவல்துறை அனுமதி வழங்கியதாக தெரிவித்தது.
இதையடுத்து மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.