பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் பிரான்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா-பிரான்ஸ் உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.