பெங்களூருவில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு வணிக விசாவில் இந்தியா வந்த பிரின்சஸ் என்ற வெளிநாட்டுப் பெண் ராஜனுகுண்டே பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். டெல்லியில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ 325 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.