ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியிலும், துக்கத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது டாடா குழுமத்தின் வரலாற்றில் இருண்ட நாட்கள் என குறிப்பிட்டுள்ள அவர், விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரிக்க இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து புலனாய்வுக் குழுக்கள் அகமதாபாத் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சந்திரசேகரன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.