இன்ஸ்டாகிராமில் கெத்தாக ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரின், மன்னிப்பு கேட்கும் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கையில் கட்டை, கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டறிந்த குடியாத்தம் போலீசார், இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை வழங்கினர். மேலும், இளைஞர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், இன்ஸ்டாகிராமில் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டது தவறுதான் என்றும், இனி அதுபோன்ற வீடியோவை வெளியிட மாட்டேன் எனவும் மன்னிப்பு கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.