அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
ஆரேகானின் ரோவேனா எனும் இடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவியதில் 20க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரம் ஏக்கருக்கும் மேலான இடங்களும் எரிந்து சேதமடைந்தன. இதனால் குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறும் நிலைக்கு ஆளாயினர்.