கோவை விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டு வைத்திருந்த பெண் பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து பெங்களூரு செல்ல முயன்ற சரளா என்ற பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 9 மில்லி மீட்டர் நீளமுடைய துப்பாக்கிக் குண்டு இருந்தது தெரியவந்தது.
அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளை அறங்காவலரின் மனைவி என்பதும் துப்பாக்கிக் குண்டு இருந்தது தனக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார்.