கர்நாடகாவில் ஜூன் 16-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து வகையான பைக் டாக்சி சேவைக்கும் கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிகளுக்கான தடை தொடரும் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.