பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது துணிச்சலாகப் போராடி உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது குதிரை சவாரி தொழிலாளியான ஆதில் ஷா சுற்றுலாப் பயணிகளைப் போராடிக் காக்க முயன்றார். ஆனால், ஆதில் ஷாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் ஆதில் ஷாவின் துணிச்சலைப் பாராட்டி அவரது மனைவி குல்னாஸ் அக்தருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.