தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சுமார் ஒருமாத காலமாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார விடுமுறையையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.