தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
44 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 42 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இதன் பின், கட்சியின் பொதுச் செயலாளராக முரளி சங்கர் என்பவரையும், மாநிலப் பொருளாளராக சையத் மன்சூர் என்பவரையும் நியமனம் செய்ததற்கான கடிதங்களை வழங்கி, அவர்களை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.