அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின்போது ஒவ்வொரு நாளும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறினார்.
ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் மூன்று முறை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியா மாறும் என மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.