இஸ்ரேல் - ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!
Aug 1, 2025, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகை மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தொடர் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.

4வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்து 481 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 380 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஹைஃபாவின் எண்ணெய் குழாய்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் சேதம் அடைந்தன.

சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகையைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை..

தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் உளவுத் துறைத் தலைவர் முகமது கசெமி உயிரிழந்தார். அதேபோல் துணை ஜெனரல் ஹசனும் கொல்லப்பட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் மஷாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி எரிபொருள் நிரப்பும் விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tags: The war between Israel and Iran continues for the 4th dayAttack on Israeli Prime Minister Netanyahu's residence
ShareTweetSendShare
Previous Post

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Next Post

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

Related News

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies