அரசுமுறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூலிட்ஸின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சைப்ரஸில் வாழும் இந்திய வம்சாவளியினரைப் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த அவர்கள், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.