மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு என்னென்ன நிபந்தனைகள் என்பதை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டுள்ளது.
மதுரை அம்மா திடலில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தால் அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டு வளாகத்தில் 2 ட்ரோன்கள் பறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.