கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஓலா, உபர் போன்ற நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், 6 வாரங்களுக்குள் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடகாவில் இன்றுடன் பைக் டாக்ஸி சேவை முடிவுக்கு வருகிறது. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வரை தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் மாநிலம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.