கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்து பந்தல் அளிக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறும் வைகாசி பிரமோற்சவத்தின்போது, திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளிப்பது முக்கிய நிகழ்வாக உள்ளது.
வெப்பம் அதிகமாக இருந்ததால், ஞானசம்பந்தர் கோயிலுக்குள் வரச் சிரமப்பட்டதால் சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி ஞானசம்பந்தருக்கு முகத்துப்பந்தல் ஒன்றை அளித்து, கோயிலுக்குள் அழைத்து வந்ததாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை விவரிக்கும் வகையில் வைகாசி பிரமோற்சவத்தில் திருஞானசம்பந்தர் முத்து பந்தலில் வந்து தேனுபுரீஸ்வரை வழிபடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருஞானசம்பந்தரின் முத்துப் பல்லக்கைச் சுமந்து திருவீதி உலா வந்து வழிபட்டனர்.