அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜ்கோட்டில் இறுதி சடங்குகளை மேற்கொள்ள மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் மேலும் 31 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 14 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.